தனிமையில் ஒருதலை காதலுடன் 555

*தனிமையில் ஒருதலை காதலுடன் 555 *




ப்ரியமானவளே...

நீ என்னுடன்
கோபம் கொண்டு...

பேசாமல் இருக்கும்
சில நாட்களில்...

எனக்கு புரியவில்லை
உன் மௌனம் நிரந்தரமானால்...

என்னால் தங்கி கொள்ள
முடியுமா தெரியவில்லையடி...

நீயும் நானும் சேர்ந்து ரசித்த
இயற்க்கை காட்சிகளை எல்லாம்...

இன்று நான் மட்டும் தனிமையில்
ரசிக்கிறேன் ஒருதலை காதலுடன்...

நீயோ
இன்னொரு துணையுடன்...

இப்போதெல்லாம் நான் சிரிக்கும்
நிமிடங்கள் பொய்யாக இருக்கலாம்...

உனக்காக சில
நேரம் வந்து செல்லும்...

என் கண்ணீர் துளிகள்
மட்டும் எப்போதும் நிஜமானவை...


மறந்துவிடாதே அந்த

பௌர்ணமி
நிலவையும்...

விடிவெள்ளி
நட்சத்திரத்தையும்.....


எழுதியவர் : முதல் பூ பெ.மணி (1-Dec-20, 4:23 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1404

மேலே