KALAIGNAN
தன் வாழ்வை பிறரின்
மகிழ்ச்சிக்காக
முழுவதுமாக அர்ப்பணித்த
ஒருவன்
தனக்கென ஓர் அடையாளத்தை
தேடி தன் வாழ்வை
அதன் வாயிலாக்குபவன்!
தன்னை தானே நித்தம்
செதுக்கும் எழிலார்ந்த
கலைநயம் கொண்டவன்
தன் பிறப்பினால் தன்னை
பிறர்க்கு
அடையாளம் காட்டுவதை விட
தன் கலையினால் தன்னை
அடையாளம்
காட்டுவதில் பெருமிதம்
கொள்பவன் !
உலகின் அழகை தன்
மனஎண்ணங்களில்
நித்தம் வெளிப்படுத்தும்
படைப்பாளி!
பிறரின் புன்னகையில் தன்
கவலைகளை
கரைத்திடும் ஓர் அற்புத
மனிதன் !
தன் திறமையினால் தனக்கென
ஓர் அடையாளத்தை
இவ்வுலகில் நித்தம்
பறைசாற்றும் ஓர் ஒப்பற்ற
மனிதனே கலைஞன் !!!