என் கவிதையின் கனவுக் கன்னி

அடங்கிப்போவதும் அடங்கி நடப்பதும்
அடக்கமாம் பெண்ணின் இலக்கணம்
அடக்கத்துள் ஒரு பெண்புலியும்
அடங்கி கிடக்கிறது என்பதை
ஆணும் மறந்திடக் கூடாது
அடக்கப் பெண் வீரப்பெண்ணாய்
இருந்தால் உலகமே பெண்ணை
மதிக்கும் பெண்ணாய் சக்தியாய்
அதுவே பாரதியின் கனவு
என் கவிதையின் கனவுக்கு கன்னியே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (19-Dec-20, 8:08 pm)
பார்வை : 348

மேலே