அன்பு

.இந்த உலகத்தில் ஒருவருக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கப்படும் ஒன்றை அவர் வேறு ஒருவருக்கு அவருக்கு நண்பர்கள் கொடுத்த ஒன்றைவிட பல மடங்கு கூடுதலாக கொடுக்கலாம். இவை ஒன்று மட்டும் தான் கொடுப்பவருக்கும் சந்தோஷத்தை தருகிறது பெற்றுக்கொண்டவருக்கும் சந்தோஷத்தைத் தருகிறது.

ஆனால் இந்த ஒன்றை நாம் நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு எவ்வளவு அதிகமாக கொடுக்கிறோமோ கொடுத்தவருக்கும் லாபம் வாங்கியவருக்கும் லாபம். ஆனால் சிலர் தனக்கென உள்ள சிறு வறட்டுக் கவுரவத்தால் கண்டிப்பாக அடுத்தவருக்கு இதை ஏன் கொடுக்க வேண்டும் தேவையில்லாதது என்று ஒதுங்கி இருக்கலாம். இதுபோல் சில மனிதர்கள் உலகில் வாழ்கிறார்கள்.

அவர்களுக்கான எண்ணம் போல் அவரது வாழ்க்கையும் பிற்காலத்தில் அமையும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். அதை அடுத்தவருக்கு தயங்காமல் கொடுக்கவேண்டும் என்றால அளவுக்கதிகமான பாசத்தையும் எப்போதும் அன்பான வார்த்தைகளையும். இவை இரண்டும் மானிடர்கள் சாகும் வரை யாருக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

எழுதியவர் : மன்னை சுரேஷ் (14-Jan-21, 1:31 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
Tanglish : anbu
பார்வை : 255

சிறந்த கட்டுரைகள்

மேலே