பாடிடுவாய் பூங்குயில் மன்றமே நீ

பாடிடுவாய் பூங்குயில் மன்றமே நீ
பாடிடு வசந்தத் தென்றலில் ராகம்
வாடிய மலர்களும் வண்ணயிதழ் மீண்டும் விரிக்குது
பாடிடு நிறுத்தாமல் நீயும் !

பாடிடு வாய்பூங் குயில்மன் றமேநீயும்
பாடிடு வாய்வசந்தத் தென்றலில் உன்ராகம்
வாடிய பூக்களும் மீண்டும் மலருதுபார்
பாடிடு நீநிறுத்தா மல் !

---இனிய இயல்பான வரிகள் இப்பொழுது இன்னிசை வெண்பாவாக

பாடிடு வாய்பூங் குயில்மன் றமேநீயும்
பாடிடு வாய்வசந்த ராகத்தை- ஆடியே
வாடிய பூக்களும் மீண்டும் மலருதுபார்
பாடிடு நீநிறுத்தா மல் !
-----இன்னிசை வெண்பா இப்பொழுது நேரிசை வெண்பாவாக

எழுதியவர் : கவின் சாரலன் (16-Jan-21, 4:27 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 57

மேலே