சம்யுக்தா

அழகின் ஆரம்பம் நீ!
ஆதி மனிதனின் பொறாமை நீ!
இமவான் மகளா நீ!
ஈடில்லா ஓவியமாய் நீ!
உலகமே உற்று நோக்க வைத்தாய் நீ!
ஊசி குத்துகிராயடி உன் பார்வையிலே ;
எளிமையாய் காட்சி தருவேனடி உன்முன்னே ;
ஏற்பாயா? வெள்ளிநிலவே !
ஐ விரலும் ஏங்குதடி உன் கைகோர்க்க;
ஒய்யாரமாய் நீ இருக்க ;
ஓடி வந்தேனடி உனை நோக்க ;
ஒவ்வை வயதானாலும் உனை மட்டுமே நேசிப்பேனடி ;
என் சுவாச காற்றே ,
உற்ற துணையும்
உறுதுணையாகிவிட்டால் ;
உலகையே வென்றுவிடலாம் .

எழுதியவர் : சிம்மயாழினி (17-Jan-21, 5:25 pm)
சேர்த்தது : சிம்மயாழினி
பார்வை : 121

மேலே