கூட்டு முயற்சியே வெற்றி

ஒற்றுமையே பலம்

ஒற்றைக் குயிலின் ஓசையில் மட்டும்
வசந்தம் வந்திடாது...
பற்றவைத்த ஒற்றைக் குச்சியால்
அண்டம் குளிர் காய்ந்திடாது.....

நாற்றம் உடைக்கும் நறுமலர் ஒன்று
நந்தவனம் ஆகிவிடாது.....
சற்றே விலகிய சரளைக்கல்
பூகோளத்தை மாற்றிவிடாது....

சீற்றம் பெறும் மகா எழுச்சியும்
ஏற்றங்கள் தரும் பல மாற்றங்களும்
ஆற்றல்மிகு சமுதாயத்தின்
கூட்டு முயற்சியே....

இனிய காலை வணக்கம்!

எழுதியவர் : வை.அமுதா (18-Jan-21, 2:37 pm)
பார்வை : 89

மேலே