உயர்த்த வேண்டும்

சேற்றில் தோன்றும்
செந்தாமரைப் பூவின் மீது
சேறு சேருவதில்லை,
மீனும் அதே சேற்றில்
பிறந்து வாழ்ந்து
புரண்டாலும் மீனின்
உடலிலும் ஒட்டாது
அதுபோல

ஏழ்மையில் பிறந்து
வறுமையில் வாடினாலும்
ஏழ்மையை சுமந்தபடி
எப்போதும் வாழாமல்
உயர் கல்வி கற்று
உயர வேண்டும் நீ--பிறரையும்
உன்னைப்போல
உயர்த்த வேண்டும்

எழுதியவர் : (18-Jan-21, 5:27 pm)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : uyartha vENtum
பார்வை : 63

மேலே