இயற்கை
கருநீல கார்மேகத்துண்டு ஒன்றைக்
கண்டேன் நான் அதில் தோன்றியது
ஒரு கொடிமின்னல் கீற்று நான்
இவற்றில் கண்டுகொண்டேன் எந்தன்
கண்ணனைக் கார்முகில் வண்ணனை அவன்
மண்ணில் உண்மை எதுவென்று அறியாது
பேதலிக்கும் மானிடரைப் பார்த்து சிரிப்பது
போலவே என் கண்திறக்க