இயற்கை
நாம் தினம் தினம் காணும்
நமது சூரிய தேவனைக் கண்ட
பின்னுமா இவ்வுலகில் இறைவனைக் காட்டு
நான் நம்புகிறேன் என்கிறாய் இப்படித்தான்
நாம் காணும் எத்தனையோ பொருளின்
உள்நின்று ஒளிர்கின்றான் 'அவன்'
காணாத தவறும் நாம்தான்
கண்ணிருந்தும் கானா குருடர்