மன உளைச்சல்

மலையை குடைந்து
ஓட்டை போடும் வல்லமை கொண்ட
எலியானது...!!

எலிப்பொறியில்
சிக்கி கொண்டால்
தன் வலிமையை மறந்து
மன உளைச்சல் கொண்டு
சிந்திக்கும் திறனை இழந்து
எலிப்பொறியில் அங்குமிங்கும்
ஓடிக் கொண்டிருக்கும்..!!

அதுபோல் தான் ...
மாவீரன் என்றாலும்
"மன உளைச்சல்"
வந்து விட்டால்
தன் வல்லமையை மறந்து
மண்டியிட்டு ....
சிந்திக்கும் திறனை இழந்து
சீரழிந்து விடுவான் ...

எலிப்பொறியில்
சிக்கி கொண்ட
எலியினைப் போல...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (22-Jan-21, 11:10 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 311

மேலே