தலைவியின் துயரத்தைக் கண்டு தோழி தலைவனுக்கு விடும் தூது
வருவேன்நான் வருவேன்நான் என்று கூறி
வாராது போனாய்நீ வாடியதே எந்தன்
தலைவியின் இன்முகம் நேற்று அழகாய்ப்பூத்து
இன்று வாடிக்கொண் டிருக்கும் அந்த
மல்லிகைப்பூ போல தலைவா ஆதலால்
இன்னும் ஏன் பாராமுகம் வந்திடுவாய் விரைவாய்க்
கட்டியணைத்து உன்கண்மையைக் காத்திடவே