தியாகிகள் தினம்

ஜனவரி 30....
காந்தி மகானே....
உன் கொள்கைளை மறந்து
உன்னை மட்டுமே
இன்று நினைத்து..
பார்க்கிறோம்...!!

மேலும்...
பொது நலமே
தங்கள் நலமென்று
வாழ்ந்த தியாகிகளையும்
நினைத்து பார்த்து
"தியாகிகள் தினம்" என்று
கொண்டாடுகிறோம்...!!

ஆனால்...
இன்று தங்கள் நலமே
பொது நலமென்று
மாறிவிட்ட மனிதர்கள்
வாழும் காலத்தில்
நாங்கள் வாழ்கின்றோம்...!!

காந்தி மகானே...
ஒரு வகையில்
நாங்கள் எல்லோருமே
தியாகிகள் தான்
எங்கள் சுதந்திரத்தை
தியாகம் செய்து
வாழ்கின்றோம்....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (30-Jan-21, 11:50 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : thiyaagigal thinam
பார்வை : 653

மேலே