காதல் வானிலே

உன்னிதழ் புன்னகை
மெல்லமாய் வீசியதுமே /
என்னில் கவி வண்டு பிறக்குதடி/
உனது வெட்டு
விழிகளைக் கண்டதுமே /
மிரண்டு திசையறியாமலே
எங்கோ பறக்குதடி /

நித்தமும் நம் காதல் மலரட்டுமே /
மொத்தமாய்க் கவிதைகளை
முத்தங்களாய் மாற்றிடுவோம் /
கோர்த்த கரமிரண்டும்
இறுக்கமாய்ப் பற்றிடட்டும் /
காதல் வானிலே
கற்பனையும் உலாவிடட்டும்/

விருப்போடு நீ வா அன்பே /
என்னிதயமதைத் திறந்து
உன் இருப்பிடமாக்கிடுவேன் /
இறக்கும் வரை
உள்ளத்தினிலே சுமந்திடுவேன் /
அன்பின் அடையாளமாய் என்னை விருந்தோம்பலாக்கிடுவேன் /

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (4-Feb-21, 1:30 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : kaadhal vaanile
பார்வை : 229

மேலே