தினம் தினம்
தினம் தினம்
____________________________ருத்ரா
ஒரு ஓவியமாக
என் முன் நீ வர வேண்டாம்.
மயிலிறகு கூட வருடுவதற்கு
கூசும்
உன் இமைகள் போதும்.
அதை தூரிகையாய் ஆக்கி
உன்னை என் விடியலாக
அந்த வானத்தையே
நிரப்பிக்கொள்வேன்
தினம் தினம்!
______________________________________