கவிதையாய் உயிரில் வந்து கலந்தாய்
கற்பனையில் காதல் பேசிய என்னிடம்,
கவிதையாய் உயிரில் வந்து கலந்தாய்.
கனவில் யூகித்து மகிழ்ந்து என்னிடம்,
உறவாய்த் தோன்றி கைகள் கோர்த்தாய்.
கேள்விகள் பலவாறு எழுந்த என்னிடம்,
பதிலாய் உன் புன்முறுவல் அளித்தாய்.
வெற்றிடம் மீதமிருந்த என்னிடம்,
உறவாய்ச் சேர்ந்து புத்துயிர் தந்தாய்.