தடை விதிப்பவள்

ஒடிகிற நிலையவ ளுடலொடு வளைவது
ஒருசிறு வளவுள இடையாமே!
கொடிநிக ரதுவிரு குறுமலை சுமையொடு
குழைவது மதுரச மடையாமே!
அடிதொடை பொருளொடு அமைகிற கவியென
அசைவது வதிசய நடையாமே!
முடிகிற கயிறது முடிவுறு வரைவர
மதுதர விடுமது தடையாமே!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (11-Feb-21, 2:08 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 60

மேலே