மயானம்
வரவேற்க ஆளில்லா வாச லென்றும்
வழிகாட்ட யாருமில்லா வனந்தா னென்றும்
தரமற்ற தானவிடந் தானஃ தென்றும்
தனியாக செலவியலா தென்றும் கூறி
வரமாட்டே னெனச்சொல்லா வியலா தந்த
வனந்தேடி செலவேதான் வாழ்க்கை யன்றோ
வரமாகக் கேளாமல் வாய்க்கு மிந்த
வாசலிலே தானெவர்க்கும் வாழ்வின் முற்று.
*