அவள்

அலர்ந்த தாமரையைப் பார்த்தேன்
மலர்ந்த அவள் முகமானது அதுவே
மூன்றாம் பிறை மதியைக் கண்டேன்
அதுவே அவள் சிறு நுதலானது
மாதுளை பூவைக் கண்டேன் அதுவே
அவளின் சிவந்த அதரம் ஆனது
துள்ளி ஓடும் கெண்டையைக் கண்டேன்
துள்ளும் காதலவு நீண்ட அவள்கண்களையே
அதில் நான் கண்டேனே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Feb-21, 6:57 pm)
Tanglish : aval
பார்வை : 206

மேலே