ஆறு ஓடும் வழி நெடுக

ஆறு ஓடும் வழி நெடுக உண்டாயின வாழிடங்கள்
வாழிடங்கள் அமைந்ததோ வற்றாத நீரினாலே
நீரின் ஓட்டத்தினாலே நிரந்தரமாய் உயர்களிருக்கும்
உயிர்களின் செழிப்பிற்கு பெருகுவோர் உழைப்போரே
உழைப்போரின் விடாமுயற்வால் செழிப்புகள் வளருமே
வளர்ந்த செழிப்பை நுகர வியாபரிகள் குவிவர் வந்து
வந்த பல நபர்களாலே வரைமுறைகள் வகுக்கப்படுமே
வகுக்கப்பட்ட பல விதிகளே குலமெனக் கொள்ளப்படும்
கொள்ளப்படும் பிரிவினாலே உழைத்தவன் பின் நிலையில்
நிலைத்தவன் விரட்டப்பட்டு வந்தவன் ஆளுவோனாய்
ஆளுவோர் அகந்தையினாலே அடிமை இனம் உருவாகும்
உருவான ஆளுமினம் உபத்திரங்கள் பல கொடுக்கும்
கொடுக்கின்ற துயர்வினால் புரட்சியும் தோன்றுமே
தோன்றும் கிளர்வினால் புது ஆட்சி மலரலாகும்
மலர்ந்த ஆட்சி மறுபடியும் முதலிலிருந்தே துவங்கும்
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (19-Feb-21, 7:22 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 69

மேலே