நீ வரைந்த கவிதை

பொதிகைத் தமிழ் எடுத்து
பூவிதழ் தேனெடுத்து
நீ வரைந்த கவிதை
எனக்கா இல்லை மலருக்கா
என்று முகம் சுளித்தாள்
உனக்கன்றி வேறு யாருக்கென்றேன் !
மலர்கள் மாலையில் பட்டிமன்றம்
நடத்துகின்றன என்னை நடுவனாக வைத்து
நான் என் செய்வேன் ?
பரிந்துரையுங்கள் நீங்கள் !

எழுதியவர் : கவின் சாரலன் (20-Feb-21, 11:01 am)
பார்வை : 109

மேலே