காதலில் நீ நின்றால்

வசந்தத்தின் வாசலை தென்றல் திறக்கும்
மாலையின் வாசலை வான்நிலவு திறக்கும்
புன்னகை வாசலை உன் செவ்விதழ் திறக்கும்
பூவிழி வாசலைத் திறந்து காதலில் நீ நின்றால்
என்நெஞ்சின் வாசலில் கவிதைகள் பூந்தோட்டம் போடும் !

எழுதியவர் : கவின் சாரலன் (20-Feb-21, 11:30 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 99

மேலே