கவிதைக்கு முற்றுப்புள்ளி இல்லை
உன் கவிதையை நீயே
மெச்சிக்கொள்வது போல
நானும் நினைவிழந்து
மெச்சிக்கொள்ள நினைக்கிறாய்.
அது என்னளவில்
கவிதையே அல்ல.
கவிதை போன்ற ஒன்றும் அல்ல.
எழுதிவிட்டு
பின்னர் நீ
எங்கெல்லாம் சென்றாய்
யாரை பார்த்தாய்
என்ன வாங்கினாய்
எதை தெருவில் தொலைத்தாய்
உன் மீது இடித்து சென்ற அவன்
கிணற்றுக்குள் நீ
டம்பளரை நழுவவிட்டது
சாமந்திப்பூவை தொட்டி நீரில்
விட்டெறிந்து விளையாடியது.
நீ சொல்லச்சொல்ல
நான்
கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.
அத்தனையும் கவிதைகள்...
__________________________________
.