வீதிக் கடைசியில் ஒரு வீடு
வீதிக் கடைசியில்
ஒரு வீடு
தினம் எத்தனை பேர்
வருகிறார்கள் போகிறார்கள்
இன்று அந்த வாசலில் நிசப்தம்
தினம் எத்தனை பேர் வந்தார்கள்
உருண்டார்கள் புரண்டார்கள்
இன்று அசைவற்றுக் கிடக்கிறாள்
தூக்கிச் செல்ல நாலுபேர் இல்லை