காதல்

உடுத்திய பட்டு சேலைக்குப் பின்னே
தெரிந்தும் தெரியாமலும் மிளிரும் உந்தன்
அழகின் லாவண்யமும் , கொடி இடையும்
பார்த்ததுமே மனதில் பதியும் கயல்
விழியழகும் சிவந்த கோமளமாம் உந்தன்
பாதங்களின் அழகும் என்னைக் கொஞ்சம்
சிந்திக்க வைத்தது உன்னழகு படைத்தவன்
பெண்ணின் அழகுக்கு வகுத்த இலக்கணம்தான்
இப்படி வடிவெடுத்து என்முன் நீயாய்
காட்சி தருகிறதா என்று

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Mar-21, 12:36 pm)
Tanglish : kaadhal
பார்வை : 129

மேலே