மகளிர்க்கு மட்டுமா
பெண்ணாய்ப்பிறந்த உன்
பெருநாள் மட்டுமல்ல.
அருள் அன்னையாய்...
அன்பு சோதரியாய்...
உயிர்த் தோழியாய்...
உன்னத மகளாய்
முழு மகிமையுடன் உனை
மதித்து ஆதரிப்பேனென
உளச்சான்றுடன்
உறுதிமொழியெடுக்கும்
ஆணாய்ப்பிறந்த எனக்கும்
அது திருநாள்தான்.