வாய்ப்புகள்
-----------------
தெரிந்த பதில்கள்
மனதில் உரைத்து
முடித்த தருணம்..
சபையில் இருக்கும்
யாரோ ஒருவர்
உரக்க சொல்லி
கை தட்டல் பெற்றிட..
நாமறிந்த பதிலென
உன்னில் இறுமாப்பு
இன்னும் இருப்பின்..
இழந்த வாய்ப்புகள்
இனியும் தொடரும்..
----------
சாம்.சரவணன்