கண்ணா நீ வருவாயா

#கண்ணா நீ வருவாயா!

உள்ளத்து உள்ளன்பை
உலகளவு தந்தவனே!
காத்திருக்கேன் *கடியறையில்*
உனக்காக கண்ணா!
*சழக்குப்* பார்த்திருந்தால்
*போழ்வுத்* தீராது
*மூதுவர்* சொற்கள்
முக்காலத்திலும் பொய்க்காது
*தறுகண்ணிலும்* வாழ்கின்றேன்
நீ வருவாய் என தலைமகனே!
கோடையில் *ஆலின்றி*
வாடிடும் செடிப்போல
நினைவுகளில் துடிக்கின்றேன்
மனவறையில் தூயவனே!
*சென்னி* மன்னா!
*ஞெகிழமெடுத்து*
*சாம்புக்* கொட்டி
*ஏடையெல்லாம்* நிறைவேறும்
நாளுக்காய் ஏங்குகிறேன்
*வேரல்* *தூம்பில்*
துளைக்கிறது நினைவு
கண்ணா! கைப்பற்றிடவே
துடிக்கிறது உள்ளுணர்வு.

#சரவிபி_ரோசிசந்திரா

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (20-Mar-21, 5:28 pm)
பார்வை : 88

மேலே