கருவறை
காரிருள் கண்டு கலங்கவும் இல்லை
தனிமையை கண்டு நடுங்கவும் இல்லை
என்னை தழுவாமலே உன் ஸ்பரிசம் உணர்ந்தேன்
உன் மகிழ்ச்சியோ உனக்குள் இருக்கும் என்னையும் புன்னகைக்க வைத்தது
உன் நா வழி நானும் அறுசுவையும் அனுபவித்தேன் சுவை யாதென்று
அறியம்முன்
உன் விழி வழியே நானும் ஒளி கண்டேன்
இன்பம் நிம்மதி அன்பு அனைத்தையும் என்ன என்பதை அறியாமலே அனுபவித்தேன்
தாயின் கருவறையில் மட்டும்