ஆற்றலை உணர்ந்திடு

வானத்தை வளைத்திடு –வரும்
வறுமையை துரத்திடு
ஞானத்தைப் பெற்றிடு –இந்த
ஞாலத்தைக் காத்திடு.

மனிதரைப் போற்றிடு –இந்த
மாந்தரை மாற்றிடு
இனியென பேசிடு –நல்
இன்பத்தைப் பெற்றிடு.

ஏழ்மை ஒழித்திடு –நல்
எழிலுடன் வாழ்ந்திடு
வாழ்வை நினைத்திடு –இவ்
வையத்தை வளர்த்திடு.

நீதியை வணங்கிடு –தினம்
நிம்மதி கொண்டிடு
சாதியை அழித்திடு –மனச்
சஞ்சலம் போக்கிடு.

அறிவியல் பெருக்கிடு –உன்
ஆற்றலை வளர்த்திடு
உரிமையைப் பெற்றிடு –நல்
உயர்வுடன் வாழ்ந்திடு.

உறவினை மதித்திடு –அவர்
உள்ளம் படித்திடு
அறத்தினைச் செய்திடு –மன
ஆற்றலை உணர்ந்திடு.

எழுதியவர் : பொதகை மு.செல்வராசன் (23-Mar-21, 1:04 pm)
பார்வை : 59

மேலே