இயற்கை

மரமெல்லாம் வானமதை தொட்டுவிட ஏங்கும்
மேகமது இறங்கிவந்து மரமதனில் தங்கும்
குரங்கெல்லாம் கிளைவிட்டு கிளையினுக்குத் தாவும்
கண்நிறையும் மலர்கூட்டம் கூடிகூடி கொஞ்சும்
வரம்பெற்ற குயிலெல்லாம் இணைதேடி கூவும்
வண்ணநிற தோகையுடன் மயில்களெல்லாம் ஆடும்
இறங்கிவரும் நதியங்கே அருவியாகிக் கொட்டும்
அழகெல்லாம் கொண்டதெங்கள் குற்றாலம் தானே !

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (23-Mar-21, 1:08 pm)
பார்வை : 209

மேலே