புதுயுகம் பிறக்குதோ
என் கண்களால் காண்பதாய் எண்ணி
எண்கண்ணாடியணிந்தஎன் மகனுக்கு
காந்திக் கண்ணாடியை (!) கொடுத்தேன்
காண்பதே கடினமாய் இருக்கிறதென்றான்;
அணிவதே ஏளனமென்று - இங்கு
ஆளுபவர்களே ஒதுக்கும் நிலையில்
கடினமாய் இருக்கிறதென்பதைக்கேட்கும்
கௌரவத்துக்குத்தான் கரையென்பதுண்டோ...?