பெருக்கலில் மனிதப்பிறப்பு
ஆசிரியத்தாழிசை பா
ஐயையோ கொடுமை நிகழுதே
உணவுகள் விளையும் இடங்கள்
உருக்குலைந் தநிலமாய் சிதையுதே
புனிதமாய் இருந்த நஞ்சை
புல்லர் பலரால் நஞ்சென
புணரமைத்து வீட்டு மனையாய்
பெருக்கலில் செல்லும் மனித
பெருக்கமும் கூட்டலில் உணவு
உற்பத்தியும் கேடாய் மனிதகுலமும்
நீரிலும் காற்றிலும் ஆயுளழியும்
நஞ்சுகள் நிரம்பியே இருக்க
நெல்வயல் அழிப்பு இடராய்
பழிக்கு அஞ்சா கெடுமதியோர்
பணமெனும் காகிதம் சேர்க்க
பாதகச் செயலுக்கு தூணாய்
நிலமழிய வளங்கள் அழியுமே
நீக்கவே இயலா பிணிகளும்
மனிதர் உடலில் வாழுமே
-------- நன்னாடன்