கன்னித் தமிழின் கவி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கீரரோ பாடக் கிழமா?சொல் நானென்றே
பேரழகன் சீண்டப் பெரும்புலவன் - சீரழகால்
என்று மிளையாய் எழிற்குமரா வென்றாரே
கன்னித் தமிழின் கவி.

- கந்ததாசன் என்ற அய்யப்பன், கோயில்பட்டி

இப்பாடல் ஒரு அருமையான நேரிசை வெண்பா ஆகும்.

பாட்டில் அமைந்த எதுகை, மோனைகளைக் கவனியுங்கள்; மரபுப் பாக்களில் பொழிப்பு மோனை (1, 3 சீர்களில்) பாட்டிற்கு அழகாகும். இருவிகற்ப எதுகையும் சிறப்பாகும்.

இப்பாடலில் இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் கலந்து வருவதால், இப்பாடல் ஒழுகிசைச் செப்பல் ஓசை உடையதாகும். கந்ததாசன் என்ற அய்யப்பன் அவர்களுக்கு என் இனிய வாழ்த்துகள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Mar-21, 8:42 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 74

மேலே