கன்னித் தமிழின் கவி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
கீரரோ பாடக் கிழமா?சொல் நானென்றே
பேரழகன் சீண்டப் பெரும்புலவன் - சீரழகால்
என்று மிளையாய் எழிற்குமரா வென்றாரே
கன்னித் தமிழின் கவி.
- கந்ததாசன் என்ற அய்யப்பன், கோயில்பட்டி
இப்பாடல் ஒரு அருமையான நேரிசை வெண்பா ஆகும்.
பாட்டில் அமைந்த எதுகை, மோனைகளைக் கவனியுங்கள்; மரபுப் பாக்களில் பொழிப்பு மோனை (1, 3 சீர்களில்) பாட்டிற்கு அழகாகும். இருவிகற்ப எதுகையும் சிறப்பாகும்.
இப்பாடலில் இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் கலந்து வருவதால், இப்பாடல் ஒழுகிசைச் செப்பல் ஓசை உடையதாகும். கந்ததாசன் என்ற அய்யப்பன் அவர்களுக்கு என் இனிய வாழ்த்துகள்.