முன்னை மதம்

முன்னை மதம்
நேரிசை வெண்பா
முப்பெரும் நாட்டையும் மூவேந்தர் சேரசோ
ழப்பாண்டி வீரமாய் ஆண்டனர் -- அப்பெரு
மான்கள் உயிராக மக்கள் வணங்கவும்
வான்முட்டும் கோயில்செய் தார்

பாரெங்கும் கீர்த்திப்ப டைசெருக்க டைந்துமே
ஊரெங்கும் கோயில் உமாபதிக்கும் -- யாரெங்கும்
யாசிக்கா சத்திரத்தில் அன்னமிட்டார் பிள்ளைகள்
வாசிக்கப் பாடசாலை யாம்

பக்தி வளர்த்து மதஞானம் போதிக்க
மக்கள்தொ டர்பு மடபதிகள் -- தக்க
வழிச்சாலை கால்நடை நீர்நிலைகள் யாரும்
பழிக்கா முடித்துவைத் தார்.

சாம்ராட்டும் பௌத்தம் தழுவ மகாவீரின்
டாம்பீகம் ஓங்க வளர்த்தார்பார் --- ஓம்பியுமே
சைவம் மறந்தனர் ஆயிரம் ஆண்டு
அவம்போக்க நால்வர்வந் தார்.

தொடரும்...


.....

எழுதியவர் : பழனி ராஜன் (28-Mar-21, 10:28 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 36

மேலே