வீரம் விளைந்தது

அழகு தமிழ் என்னை
பிரசவித்தது
அது தன் தாலாட்டினால் என்னை
தூங்க வைத்தது
பாசத்துடன் எனக்கு பாலூட்டியது
நான் வளர வளர
அது தமிழ் அமுது ஊட்டியது
சக்தி கொடுத்த தமிழ்
என்னை மெருகூட்டியது
பள்ளிப் படிப்பில் பட்டப் படிப்பில்
என்னை புடமிட்டு ஜொலிக்க செய்தது
தாயே என் தமிழ் தாயே
நீயே எனக்கெல்லாம் என்றாகி
எழுச்சி கொண்ட நிலையில்
அந்நிய மொழி ஆதிக்க வெறி
எம்மை ஆள நினைத்தது
எதற்கும் அசராமல் நின்ற எம்மை அழிக்க
அயோக்கியரின் கடின உள்ளம்
ஆர்ப்பரித்தது ,
ஆனாலும் அடங்கா தமிழன்
எதற்கும் அசர மாட்டான் என
நிரூபிக்க
தமிழ் தாயே நீ கொடுத்த
வீரம் மிக்க தமிழ் பால் தைரியம் கொடுத்தது ,
எம்மை வீர விளையாட்டில்
போர் முனையில் நிறுத்திதான் பார்க்கிறது
தொடங்கும் போது அமைதி
படை நெருங்கும் போது பாய்ச்சல்
அவனே தமிழன்
அடங்கா தமிழனை இனம் காண்பது
அவன் கொண்ட திமிரால்,
மொழிகளில் தலையானது தமிழ்மொழியே
எம் தாயே தமிழ் தாயே நீ தந்திட்ட தமிழ் பால்
தன்னாதிக்க வரலாறு படைத்தது
போற்றுகிறோம் என்றும் உன்னை
வாழ்கின்றோம் உன்னால் ,
உன்னால் எம் வீரம் விளைந்தது
அகிலம் அழிந்தாலும்,அழியாது உயிர் வாழும்
எம் தமிழ் தாயே வாழி நீ வாழியவே

எழுதியவர் : பாத்திமாமலர் (30-Mar-21, 12:08 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : veeram vilainthathu
பார்வை : 161

மேலே