மாயவனும் நினைக்கலையே
தவறு செய்யாதவர்கள்
தரணியில் யாருமில்லை
மனிதனாக பிறப்பெடுத்தும்
மனிதர்களுக்கு உதவாம—தனக்கென
செல்வம் சேர்ப்பவனை
தெய்வம் கூட தடுக்கலையே !
வினாடியில் செய்த தவறு
உசுப்பேத்தி மகிழ்வித்தாலும்,
வாழ்நாள் முழுதும் மனதுக்கு
வேதனை தந்து உயிரை மாய்க்க
உருதுணையாய் நிழல் போல
கூடவே வந்து சாய்க்கும்
உயிருக்கு போராடும்
வேறொரு மிருகத்துக்குக்
காட்டு விலங்குகள் கூட
கை கொடுத்து காப்பாற்றும் ,
மனிதன் மனிதனுக்கு உதவ
மாயவனும் நினைகலையே !