ஆறறிவு

ஆறறிவு
சோமன் ஸ்ரீதரன்

புல்லுண்டு புறம் வதியும்
ஐந்தறிவுகளிலும்

நெல்லுண்டு பறந்து திரியும்
புள்ளினத்திலும்

செல்லுண்டு சடமாய் கரையும்
தளபாட அஃறினையிலும்

கள்ளுண்டு சொல் உமிழும்
சில மானிடரிலும்

கீழிங்கு….

உள்ளொன்றும் வெளியொன்றும் உரைக்கும்
பொல்லா ஆறறிவு

சோமன் ஸ்ரீதரன்

எழுதியவர் : சோமன் ஸ்ரீதரன் (4-Apr-21, 5:38 pm)
சேர்த்தது : சோமன் ஸ்ரீதரன்
பார்வை : 156

மேலே