ஆறறிவு
ஆறறிவு
சோமன் ஸ்ரீதரன்
புல்லுண்டு புறம் வதியும்
ஐந்தறிவுகளிலும்
நெல்லுண்டு பறந்து திரியும்
புள்ளினத்திலும்
செல்லுண்டு சடமாய் கரையும்
தளபாட அஃறினையிலும்
கள்ளுண்டு சொல் உமிழும்
சில மானிடரிலும்
கீழிங்கு….
உள்ளொன்றும் வெளியொன்றும் உரைக்கும்
பொல்லா ஆறறிவு
சோமன் ஸ்ரீதரன்