அன்பிற்கும் உண்டோ
பிஞ்சு நெஞ்சில் புகவில்லை வஞ்சம்
பிறரிடம் காட்டும் அன்பின் மஞ்சம்..
அந்த அன்பிற்கும் உண்டோ அணை
அகிலமதில் அதற்கே இல்லை இணை..
சின்னப் பிள்ளையில் பேதங்கள் இல்லை
சிரிப்புடன் ஆட்டமே அன்பின் எல்லை..
வளர்ந்ததும் மாறி விடுகிறானே மனிதன்
வாய்ப்பே இல்லை அவனிடம் புனிதம்...!