என்னுள் முதலெழுத்தாய் வாழ்ந்திட வா

ஓரெழுத்து கவிதை...
என் உயிர் எழுத்தே நீ...!
ஐம்புலன்கள் ஏங்கித் தவிக்கும்...
என் மெய் எழுத்தே நீ...!
அருகாமை வேண்டி நிற்கிறேன்
துணை எழுத்தாய் வருவாயா?
உன் இயல்பு சார்ந்து வாழும்
சார்பெழுத்தாய் அழைப்பாயா?
உன்னை நுண்மையாக்கி...
உன்னுள் பொருள்பட வாழும்
ஆய்த எழுத்தாய் நான்...
உனது உயிராய்... உனது மெய்யாய்...
உன்னுள் கலந்து விட்டேன்...
என்னுள் முதலெழுத்தாய் வாழ்ந்திட
வரம் ஒன்று மட்டும் தந்துவிட்டால்...
அன்னை தமிழாய் என்றுமே
உன்னுள் தங்கிடுவேனே...!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (5-Apr-21, 10:52 pm)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
பார்வை : 299

மேலே