இதயத்தைக் கிள்ளுதே என்காதலி தலி
நுதல்தழுவும் சுருளிழை
இதழ்தழுவும் தமிழ்மொழி
இதம்தரும் புன்னகை
இதயத்தைக் கிள்ளுதே !
----குறளடி அல்லது இருசீரடி நான்கு கொண்டு
ஒரே எதுகை அமைந்து வந்த வஞ்சித்துறை பாவினன்
வஞ்சிப்பாவின் இனமே வஞ்சித்துறை வஞ்சியிருத்தம்
மற்றும் வஞ்சித்தாழிசை .
நுதல்தழுவும் சுருளிழை எழிலும்
இதழ்தழுவும் தமிழ்மொழி அமுதும்
இதம்தரும் புன்னகை பூம்பொழிலும்
இதயத்தைக் கிள்ளுதே என்காதலி !
----நுதல் = நெற்றி
----இது சிந்தடி அல்லது முச்சீரடி நான்கு கொண்டு
ஓரே அடியெதுகையால் அமைந்ததால் வஞ்சி விருத்தம்
இரு சீரடியால் அமைவது வஞ்சித்துறை
முச்சீரடியால் அமைவது வஞ்சியிருத்தம்
பாவினப்பாக்கள் வெரி சிம்பிள் !