என்ன ஒரு பேரழகு

என் இரவு தூக்கத்தை இடித்து உன் கருவிழிக்குள் மையாய் பூசி கொண்டவளே!

உன் கொலுசின் சிணுங்கள் சப்தம் என் இதய துடிப்பாய் மாறிப் போனதடி!

தேனை விட தித்திப்பான குரலோசை என் செவியில் புது ரீங்காரம் பாடுதடி!

முத்து போன்ற பல்லின் ஒளியை அந்த முழுமதியும் கடன் கேட்குதடி!

காதோர கம்மல் இரண்டும் என் கண்மணி உன்னை பற்றி கவி பாடுதடி!

கரும் கூந்தல் அருவி ஒன்று என் கனவிலே கரை புரண்டு ஓடுதடி!

என்ன ஒரு அழகு என்று
எட்டுதிக்கும் வியப்புடன் பார்குதடி!

இப்படி ஒர் பேரழகா!
என்று
இவ்வுலகம் இயங்க மறுக்குதடி!

எழுதியவர் : சுதாவி (11-Apr-21, 6:12 pm)
சேர்த்தது : சுதாவி
Tanglish : yenna oru perazhagu
பார்வை : 253

மேலே