ஒற்றை மயிலிறகு
ஒற்றை மயிலிறகு
___________________________________ருத்ரா
மயிற் பீலி தான் என்றாலும்
ஒரு வண்டி நிறைய பாரமாய்
என்னால் இழுக்க முடியவில்லை.
மூச்சுத்திணறுகிறது.
அழகாய் கிச்சு கிச்சு மூட்டுகிறதே
அவள் அன்று உதிர்த்த சிரிப்பு
ஒரு மயிற்பீலியாய்
என்று
விரல் இடுத்தில் வைத்து
விந்தை உலகம் ரசித்து நின்றேன்.
அப்புறம்.
அவள் முகம் காணவில்லை.
முகவரியும் இல்லை.
முகநூலும் இல்லை.
காத்திருக்கும் சுமையின் பாரம்
தாங்க முடியவில்லை.
என் இதயம் தைத்த அவள் சிரிப்பு
எனும் அந்த ஒற்றை மயிலிறகா
பாரம் தாங்காது
இப்படி என்னை ஒரு
பாதாளத்தில் அமுக்குகிறது?
ஓ! பெண்ணே!
எங்கிருந்தாவது
இன்னொரு கலீர் சிரிப்பை
சிந்தி வையேன்!
இந்த மயிற்பீலிகளே
எனக்கு இந்த ஆகாசத்தில்
ஒரு கூடு கட்டித்தரட்டும்.
________________________________________