மயிர்ப்பீலி

ஒரு மயிர்ப்பீலி .....
அதனுள் எத்தனை
வர்ண ஜாலங்கள்
ஆக்கத்தில் வியக்க தகும்
ஆழ்ந்த சமச்சீர்.....
அப்பப்பா என்னப்பா
கண்ணா என்னதான்
ரகசியமோ உந்தன்
படைப்பின் பின்னால்
நீ இல்லாது உலகேது
மண்ணேது நீர் ஏது
தீயது விண்ணேது
பரிதியும் ஏது
நிலவும் கோளும்தான்
இதை அறிந்த கொள்ளா
மமதைக் கொண்ட
வீண் அறிவுக்கு கொண்ட
வீணர்கள் நாத்தீகர்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Apr-21, 2:17 pm)
பார்வை : 58

மேலே