தங்ககூண்டில் மனிதன்

இளமையில் வாழும்
வாழ்க்கையில்
மனிதர்கள் தங்கள்
குழந்தைகளின்
வளர்ச்சிக்காக
தங்களின் சுகங்களை
தியாகம் செய்து
வாழ்கிறார்கள்...!!

தங்களது
முதுமை காலத்தில்
அவர்களின் பாசத்தின்
பராமரிப்பில்....!!!
தங்களின் சுதந்திரத்தை
இழந்து வாழ்கிறார்கள்
தங்க கூண்டில்....!!

இது காலத்தின்
கட்டாயமா...!! இல்லை
கடமையின் கட்டுப்பாடா...!!..??

மொத்தத்தில் மனிதன்
இறுதிவரை
தன் விருப்பம் போல்
வாழ முடிவதில்லை...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (17-Apr-21, 9:12 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 145

மேலே