இதயத்தைத் தொடுகிறதுன் அந்திப்பொழுதின் நாடகம்

ஒருபொழுதில்
புன்னகை ஓவியம்
மறுபொழுதில்
விழிகளில் காவியம்
இமைப்பொழுதில்
இன்னொரு மாற்றம்
இதயத்தைத் தொடுகிறதுன்
அந்திப்பொழுதின் நாடகம்

ஒருபொழுதில் புன்னகை ஓவியம் ஆகும்
மறுபொழுதில் கண்களோ காவியம் பேசும்
இமைப்பொழுதில் இன்னொரு மாற்றம் நிகழும்
அரங்கேறும் அந்திநாட கம்

----இயல்பில் பின் யாப்பில் இன்னிசை வெண்பாவாக

எழுதியவர் : கவின் சாரலன் (18-Apr-21, 6:13 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே