ரோஜா பூக்கள்
ரோஜா பூக்கள்
இரத்த சிவப்பாய்
மலைகளின் நடுவே
முகம் காட்டி
எழுந்து வந்த சூரியன்
தன் கதிர் கைகளால்
உலகத்தை தொட்ட்
பொழுது
சோம்பி கிடந்த
பனி துளிகள்
கதிரின் கை
சூடு பட்டு
கரைந்து காணாமல்
போயின
சுற்றி வர
முட்களாய் காவல்
இருந்தும்
உம் மென்று
முகம் வைத்து
இருந்த ரோஜா
மலர்கள் கூட்டத்திற்கு
அப்படி என்ன
வெட்கமோ !
கதிரவனை கண்டவுடன்
முகம் சிவந்து
அவனுக்கு எதிராய்
முகத்தை திருப்பி
கொள்கின்றன
என்றாலும் அவைகளின்
உள் மனது
உணர்ச்சிகளை
அதன் இதழ்கள்
காண்பித்து விடுகின்றன
இவைகளின் இரகசிய
தொடர்புகளை அறியாத
அப்பவியாய் முட்கள்
இன்னும் இவைகளை
காத்து நிற்கின்றன