ஏமாற்றம்
கடற்கரையில் நடை தடுமாறி கொண்டிருந்தன என் கால்கள்.ஏமாற்றங்களை தாங்க முடியாமல் வேதனையில் தாறுமாறாக துடித்துகொண்டிருந்தது என் இதயம்.
கலங்கிய நிலையில் ஆறுதலுக்காக கடல் எல்லையை ஏறெடுத்து பார்த்தன என் கண்கள்.வானமும்,கடலும் இணைந்ததை போன்ற ஒரு மாயத்தை ஏற்படுத்தி என்னை ஏமாற்ற இயற்கைகூட எத்தனித்துகொண்டிருந்தது .....