காந்தமான மனதினை

வெளி விருத்தம் பா


பகட்டுக்கு வாழாதீர் பயனில்லாபொருளை வாங்காதீர் - யாவருமே
திகட்டும் அளவுக்கு உணவினைதினமுமே உண்ணாதீர் - யாவருமே
இகழ்வென எதனையும் எண்ணியேநல்லதையே விலக்காதீர் - யாவருமே
அகற்றும் கலையினைக் கற்றவாறே நிலைத்துவாழ்வீர் - யாவருமே.

பருவங்களில் விளையும் உணவுகளைவிரும்பியே உண்ணுவீர் - அனைவரும்
கருமேகம் பொழிவின் பயிரையேநாடியே உண்ணுவீர் - அனைவரும்
மருந்திலா நற்பயிரை விளையவைக்கவே உதவுவீர் - அனைவரும்
விருந்தென உணவினை பகிர்ந்தேயாவருக்கும் பரிமாறுவீர் - அனைவரும்

உடலினை போற்றியேஎந்நாளும் காத்திடுவோம் மனிதரான - நாமெல்லாம்
கடலென இருக்கின்ற காந்தமானமனதினை அடக்கிடுவோம் - நாமெல்லாம்
நடந்திடும் எவற்றையும் பயப்படாமல்எதிர்க்கொண்டு நின்றிடுவோம் - நாமெல்லாம்
படபடக்கும் மனதினைபக்குவமாய் வைத்துவிட்டால் சாலவாழலாம் - நாமெல்லாம்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (26-Apr-21, 7:58 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 58

மேலே