உள்ளம் உருகியே
ஒழுகிசை அகவல் ஓசை உடைய
நிலைமண்டில ஆசிரியப்பா
மண்ணின் உள்ள நல்லதைக் கண்டால்
கண்ணில் காணும் காட்சிக் கொப்ப
எண்ணம் தோன்றிடும் இடந்தான் எதுவோ
மதியோ அறிவோ மயங்கிடும் மனமோ
புதிரென இருக்கும் உயிரோ உணர்வோ
எண்ணம் தோன்றிடும் இடந்தான் எதுவோ
கதிரை நிலவை கவின்மிகு நிறத்தை
மழையையும் இடியை மின்னலின் கீற்றை
காணும் போதினில் எண்ணம் எதுவோ
உள்ளம் உருகியே இன்பம் பெருகிடும்
இடமும் தடமும் இருக்கும் களமது
எதுதான் என்பதை அறிவது சிறப்பே.
----- நன்னாடன்.